"இனி சனிக்கிழமைகளில் `நோ' லீவு கிடையாது" - மாணவர்களுக்கு ஷாக்.. - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

x

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக சென்னை, விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன. மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் என 7 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதுபோல் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், அரையாண்டு தேர்வு மற்றும் பொது தேர்வுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில், மழை முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்