தமிழகத்தில் கோர விபத்தை தவிர்த்த ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது | Train

x

ரயில் விபத்தை தவிர்த்த மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" விருது வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தெற்கு ரயில்வே அளவில் ஆறு ரயில்வே ஊழியர்கள், மூன்று அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். மதுரை கோட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில், ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக உள்ள வீரப்பெருமாள் என்பவர், ரயில் பாதையில் விரிசல் இருப்பதை அறிந்து விபத்தை தடுத்ததற்காக, தேசிய விருது பெற இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்