நள்ளிரவை அலறவிட்ட சத்தம் - சுக்குநூறான 30 வாகனங்கள் - சிக்கிய 16 வயது சிறுவன்

x

சென்னை கொடுங்கையூரில், 30க்கும் மேற்பட்ட வாகனங்களை மது போதையில் அடித்து நொறுக்கிய வழக்கில், சிறுவனை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர். கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் நிறுத்தியிருந்த 15 ஆட்டோக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட வாகனங்களை பைக்கில் வந்த மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 16 வயது சிறுவனை கைது செய்து , தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்