மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற மேயர்

தஞ்சையில் கோடை விடுமுறைக்கு பின்னர் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் பூ கொடுத்து, பேனா வழங்கி வரவேற்றார்...
x

மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற மேயர்

தஞ்சையில் கோடை விடுமுறைக்கு பின்னர் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் பூ கொடுத்து, பேனா வழங்கி வரவேற்றார். தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சண்.ராமநாதன் சென்று மாணவர்களை வரவேற்றார். மேலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு அரசின் பாடப்புத்தகங்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து புத்தகங்களை பெற்று கொண்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்