வேலில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சை - ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்

x

வேலில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சை - ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோயில் வேலில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள், 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. ஒட்டனந்தல் கிராமம் இரட்டைக் குன்றின் மீது ரத்தின வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாள் விமரிசையாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, உற்சவ காலத்தில் முருகன் வேலில் சொருகப்பட்டிருந்த 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்பட்டன. இவை மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. அதிகபட்சமாக ஒரு பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.


Next Story

மேலும் செய்திகள்