கோயில் நிர்வாகிகள் வழக்கு.. 7 ஆண்டு சிறை..

x

கரூர் மாவட்டம், அச்சமாபுரம் அருகே, கோயில் புதிய நிர்வாகிகளுக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அச்சமாபுரத்தில் உள்ள கெங்கல அம்மன் கோயிலில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும், கரூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்