EVM மெஷின் கொண்டு வர இங்கு ஏது பாதை..? - கொந்தளித்த காரைக்குடி மக்கள்..

x

காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, கீழபுதுவட்டி மற்றும் மேல புது வட்டி ஆகிய கிராமங்களில், சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டு குழியுமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள், மருத்துவ உதவிக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினருக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதுடன், தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்