கோரிக்கை வைத்த விஜயபாஸ்கர்.. சுட்டிக்காட்டிய அமைச்சர் | jallikattu

x

ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்த கோரிக்கைக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்து, பாரம்பரியமாக பின்பற்றப்பட்ட கிராம கமிட்டியே டோக்கன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில், நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்த அனுமதி அளித்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டினார்


Next Story

மேலும் செய்திகள்