நண்பனுக்காக தட்டிக்கேட்ட நபர் கொலை...சிக்கிய 3 பேர்

x

நண்பரை தகாத வார்த்தைகளால் திட்டியவரை தட்டிக்கேட்க சென்ற இளைஞர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். அவரின் நண்பரான மஞ்சுநாத் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், எம். காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், நந்திஸ் மற்றும் விஜயகுமார் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்