4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x

4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மேற்கூறிய 4 மாவட்டங்களிலும் மூன்றாவது நாளாக, நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்