மூதாட்டியின் உயிரை பறித்த கனமழை - தொகுப்பு வீடு இடிந்து விபத்து

x

திருவிடைமருதூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் வடக்கு தெருவில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் 20-க்கும் மேல் உள்ளன. இங்குள்ள தொகுப்பு வீடு ஒன்றில் கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்தார். இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கருப்பாயி வசித்து வந்த வீடு இடிந்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில், இடியும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, அவற்றை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்