ஜேசிபி மீது மோதிய அரசு பஸ் - சுக்குநூறாக நொறுங்கிய கண்ணாடி.. 13 பேருக்கு நேர்ந்த கதி? | Poonamallee
பூந்தமல்லி அருகே, ஜேசிபி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். கோயம்பேட்டில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து, சென்னீர்குப்பம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி மீது மோதியது. இதில் அரசு பேருந்தின் முகப்பு பகுதி நொறுங்கிய நிலையில், பேருந்தில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story