மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இறப்பு... அதிர வைத்த பின்னணி - மூவர் கைது..!

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகே வாய்க்காலில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அயன் சிங்கம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அவரது மகன் வனராஜூம் விவசாய நிலத்தில் உள்ள கால்வாயில் இறங்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து கால்வாய் ஓரம் வனவிலங்குகள் வராமல் தடுக்க பயன்படுத்தியாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்