4 கோடி வாங்கிவிட்டு நாமத்தை போட்ட குடும்பம் - எஸ்.பி. ஆபிஸிற்கு வரிசை கட்டி வந்த மக்கள்

x

திண்டுக்கல் வாழைக்காய் பட்டி பிரிவு முத்தமிழ் நகர் பகுதியில், லூயிஸ், அவரது மனைவி கரோலின் ரீட்டா மற்றும் உத்திராஜ் ஆகிய 3 பேர் சேர்ந்து கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள், கட்டுமான பொருட்கள் குறைந்த விலையில் தருவதாகக் கூறியதை நம்பிய, கோபால்பட்டி, சாணார்பட்டி மற்றும் வேடப்பட்டி பகுதிகளை சேர்ந்த பலர், வங்கி காசோலை மூலமாக சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், திடீரென நிறுவனத்தை பூட்டிவிட்டு, மூவரும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், இதுகுறித்து விசாரித்தபோது, இதே பாணியில் பலரிடம் அந்த மூவரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்