பேஸ்புக் காதலன் அடித்த ட்விஸ்ட்...2 குழந்தைகளின் தாய் செய்த காரியம்

x

பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்மணி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் இவருக்கு, செக்கானூரணி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவருடன், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில் சரண்ராஜ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்த கண்மணி, தனது இரு குழந்தைகளுக்கும் எலி பேஸ்ட் அளித்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். பின்னர் சரண் ராஜை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்த அவர், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து கண்மணியையும் அவரது குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், நம்பிக்கை மோசடி செய்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என இரு வழக்குகள் பதிவு செய்து, சரண்ராஜை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்