பிரபல நகைக்கடையில் ED அதிரடி சோதனை - கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்

x

பிரணவ் ஜூவல்லரி இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி அதிக வட்டி தருவதாக லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இதன் உரிமையாளர் மதன் மற்றும் கிருத்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது

இந்நிலையில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது

இது தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கணக்கில் வராத சுமார் 24 லட்சம் மற்றும் 11.60 கிலோ தங்கம் அமலாக்கத்துறை பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்