மின் பற்றாக்குறை...! அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய தகவல்

x

கோடைக்கால மின் தேவை எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கோடைக்காலத்தில், மின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுத் தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டாம் என தலைமை பொறியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்