"துப்பாக்கி முனையில் 1000 சவரன் கொள்ளை.." அலறவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்... திண்டுக்கல் அருகே அதிர்ச்சி

x

திண்டுக்கல் அருகே, துப்பாக்கி முனையில் மூதாட்டியை மிரட்டி சொத்து, ஆயிரம் சவரன் நகைகளை பறித்த வழக்கில், ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிப்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி ராமுத்தாய். இவருக்கு சொந்தமான கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு, பாலமுருகன் என்பவர் காப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் சேர்ந்து, மூதாட்டியிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், மூதாட்டியின் வீட்டிற்கு வந்த தம்பதியினர், ராமுத்தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரது ஆயிரம் சவரன் நகை மற்றும் வைர நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன், ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்