பாதயாத்திரை சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்! - திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்

x

Dindigulமாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள, மலைப்பட்டியை சேர்ந்தவர் பொன்னன். 55 வயது விவசாயியான இவர், கடந்த 22 ஆம் தேதி ஊர் மக்கள் 500 பேருடன் சேர்ந்து பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். வேடசந்தூர் அருகேயுள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அதிகாலை 5 மணியளவில் பாதாயாத்திரை சென்று கொண்டிருந்த பொன்னனை அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இதில், படுகாயமடைந்த பொன்னன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்து மூன்று நாள்களாகியும் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம்சுமத்திய கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோருடன் வந்து எரியோடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்