"அண்ணா நேத்தே சொல்டாரு.. சொன்னா இவங்க கேக்க மாட்டாங்க" - அடங்காத TTF ரசிகர்கள்

x

பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக, பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎஃப் வாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, உத்தரவிட்டதை அடுத்து, அவரை புழல் சிறையில் அடைக்க போலீசார் காரில் அழைத்துச் சென்றனர். முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் டிடிஎஃப் வாசனை காண, ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்