நாசமாக்கும் யானை கூட்டம்.. மக்களுக்கு எச்சரிக்கை | Hosur | Elephant

x

ஒசூர் அருகே கிராமப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த யானைகள், அகலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து ராகி, துவரை, முட்டைகோஸ், தக்காளி, பீன்ஸ் மற்றும் ரோஜா தோட்டங்களை சேதப்படுத்தி வந்தது. இளைஞர்களும், பொதுமக்களும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்