3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டத்தில், 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்த பணம், சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், தணிக்கை செய்ய வந்தவர்களுக்கு கொடுக்க வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்