பூஜைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கார்..மறுநொடியே மாறிய தருணம்.. நூல் இழையில் தப்பிய உயிர்

x

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட கார், கோயிலுக்கு பாய்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தான் புதிதாக வாங்கிய காரை, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசுவாமி கோவிலுக்கு எடுத்து வந்தார். பூஜை முடிந்த பிறகு, அவர் காரை இயக்க முயன்றபோது, பிரேக்கை அழுத்துவதற்கு பதில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து, நூறுகால் மண்டபத் தூணில் மோதி நின்றது. இதைப் பார்த்த பக்தர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். சுதாகர் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்