பிரசாரத்தில் அதிமுக-தேமுதிகவினர் மாறி மாறி மோதல் - பரபரப்பு காட்சி

x

கடலூர் மக்களவை தொகுதியில், அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவின் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக இரு கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிமுக மற்றும் தேமுதிக கட்சி கொடியுடன் இரு கட்சி நிர்வாகிகளும் பைக்கில் ஊர்வலம் சென்ற நிலையில், ஒருவரையொருவர் முந்தி செல்வதில் தகராறில் ஏற்பட்டு மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்