"பல்நோக்கு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு

x

கோவையில் திமுக சார்பில் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை, கோவை ரைசிங் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

கோவையில் பல்நோக்கு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும், ஐ.ஐ.எஸ்.சி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகியவை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைத் தொழில் புத்துயிர் பெற சிட்கோ அமைக்கபடும் என்றும், கிரில் உற்பத்தியாளர்களுக்காக புதிய சிட்கோ உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்