மெஷினுக்கே அல்வா கொடுத்த திருடர்கள்"-பணம் வரும்போது கரெக்ட்டா.."-ஏடிஎம் கொள்ளையர்கள் வாக்குமூலம்

x

நெல்லையில் ஏடிஎம் கொள்ளை தொடர்பாக சிக்கிய வடமாநில இளைஞர்களை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நெல்லை, ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கடந்த 22ம் தேதி அரியானாவை சேர்ந்த முப்பட், சலீம் ஆகிய இருவர் பிடிபட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது, ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது தொடர்பாக யூடியூபில் கற்றுக்கொண்டதாகவும், ஏடிஎம்மில் கார்டை சொருகி, பணம் வருவதற்கு, சில நொடிகளுக்கு முன் மெஷினிற்கான மின் இணைப்பை துண்டித்தால் பணமும் வந்துவிடும்... வங்கி கணக்கில் பணமும் கழியாது என்று தெரிவித்தனர்... மேலும் இதே போன்று, வடமாநிலங்களில் பல இடங்களில் கொள்ளை அடித்ததாகவும் தெரிவித்தனர். வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பை துண்டிப்பதற்கான அமைப்பு இல்லாததால், அவர்கள் தமிழகத்தை தேர்ந்தெடுத்து நெல்லைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்