சர்ச்சில் அதிசயம்..! மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் திடீர் நீரூற்று... பக்தர்கள் ஆச்சரியம்

x

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் இடத்தில் திடீரென தோன்றிய நீரூற்றால் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்... வடக்கியூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சந்தியாகப்பர் தேவாலயத்திற்கு முன்பாக பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் திடீரென நீரூற்று உருவானது... இத்தகவல் தீயாய்ப் பரவிய நிலையில், ஏராளமானோர் நீரூற்று உருவான இடத்தைப் பார்வையிட்டு வணங்கிச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்