இறுதிக்கட்டத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கு... அதிமுகவில் அடுத்த சலசலப்பு

x

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக, காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் கைதை கண்டித்து, மறியலில் ஈடுபட்டதாக, பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்