சென்னை தி.நகர் கோயிலில் கொள்ளை... தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை தியாகராய நகரில், கோயில் சிலையில் இருந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சமையல்காரரை போலீசார் தேடி வருகின்றனர். விஜயராகவா சாலையில் ஹயக்கிரிவா வாதிராஜ மடம் என்ற திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்கள் வழக்கம்போல பூஜை செய்வதற்காக வந்தபோது, சிலையில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, 5 நாட்களாக கோவிலில் தங்கி சமையல்காரராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தினகரன் என்பவர் 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்