சென்னையில் குழந்தையை அழைக்க சென்ற தந்தை.. ஸ்கூல் வாசலில்.. ரத்த வெள்ளத்தில் சரித்த கும்பல்

x

சென்னை, திருவொற்றியூரில் தன் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்ற தந்தை, பள்ளி வாசலில் வைத்தே மர்மகும்பல் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான நிலையில், பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் பதற்றத்தில் உறைந்து போயினர். படுகாயமடைந்த ரஞ்சித்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து, சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்