சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - திருதிருவென முழித்த சார்பதிவாளர் - கரூரில் பரபரப்பு

x

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து, கணக்கில் வராத ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து சார்பதிவாளர் சக்திவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்