15 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. மகன் கண்முன்னே பிரிந்த தந்தை உயிர்

x

15 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. மகன் கண்முன்னே பிரிந்த தந்தை உயிர்

அ.வெள்ளோட்டில் வசித்து வந்த வெள்ளிமலை என்பவரின் மகன் ஆனந்த், கீரை விவசாயம் செய்து திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று விற்பனை செய்து வந்தார். இதற்காக புதிதாக வாங்கப்பட்ட காரை, நேற்று மாலை வெள்ளிமலை ஓட்டிப் பழக நினைத்தார். தனது மகன் ஆனந்த்திடம் சொல்லிவிட்டு வெள்ளிமலை காருக்குள் ஏறி அமர்ந்தார். காரை இயக்கியபோது, கார் பின்னோக்கி சென்று 15 அடி ஆழத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் கார் முழுமையாக தண்ணீரில் மூழ்கியதைப் பார்த்து, மகன் ஆனந்த் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் இறங்கி பார்த்தபோது, கார் முழுமையாக நீருகுள் மூழ்கி விட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி காருக்குள் இறந்த நிலையில் சிக்கியிருந்த வெள்ளிமலையை மீட்டு தூக்கி வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து காரை மீட்க கிரைன் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. இது குறித்து அம்பாத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்