பாஜக அலுவலகத்திற்கு தீவைப்பு..? பாஜகவினர் சாலை மறியல் - குவிந்த போலீசார்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் தீ பந்தம் வீசியதாக கூறி பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுவயல் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் தீ பந்தம் வீசியதாக கூறப்படுகிறது. முதலில் பெட்ரோல் குண்டு என செய்தி பரவிய நிலையில், பின்பு தீ பந்தம் எனக்கூறிய பாஜகவினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சம்பந்த இடத்தில் பெட்ரோல் குண்டோ, தீ பந்தமோ வீசியதற்கான தடயம் ஏதும் இல்லை என கூறும் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்