5 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

x

நெல ்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கான தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்