கோயில் உண்டியலுக்கு சீல் வைக்க முயற்சி - அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

x

ராணிப்பேட்டையில், கோயில் உண்டியலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில், பூர்வீகமாக பொதுமக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த படவேட்டம்மன் ஆலயத்தின் வெளியே உள்ள உண்டியலை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க வந்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உண்டியலை சுக்குநூறாக உடைத்துத்தள்ளி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்