"தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு கல்லை கூட வைக்க முடியாது" - பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்!

மேகதாது விவகாரத்தில் தமிழக விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் உறுதி அளித்ததாக, பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
டெல்லியில், எஸ்.கே.ஹல்தாரை சந்தித்த, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு மாநிலம் எதிர்த்தாலும் அணை கட்ட முடியாது என்பதை எஸ்.கே.ஹல்தார் எடுத்துரைத்ததாக பி.ஆர்.பாண்டியன் கூறினார். அத்துடன், மேகதாது கட்ட அணை மத்திய அரசால், காவிரி ஆணையத்துக்கு திட்ட வரைவு அறிக்கை அனுப்பப்பட்டதாவும், இது தொடர்பாக கருத்துக்களை கேட்க சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாக ஹல்தார் தெரிவித்ததாக பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்