டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? - அமைச்சர் பதில்

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
x
தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 26 ஆயிரத்து 384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரத்து 777 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த  8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8 ஆயிரத்து 221 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் ஏப்ரல் மாததிற்கு முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  வரும் காலத்தில் 
மருத்துவ வல்லுனர் குழு ஆலோசனைப்படி அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்