சிறுவனை கொன்றது ஏன்? - பக்கத்து வீட்டு பெண் பரபரப்பு வாக்குமூலம்

கன்னியாகுமரி அருகே நகைக்காக ஆசைப்பட்டு, சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
x
கன்னியாகுமரி அருகே நகைக்காக ஆசைப்பட்டு, சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். கடியபட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்த ஜான் ரிச்சர்டு - சகாய சில்ஜா தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி, வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, மாயமானார். அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்காததால்,  மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், அவர்கள் வீட்டிற்கு அருகே வசித்து வந்த பாத்திமா மீது சந்தேகமடைந்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, நகைக்காக, சிறுவன் ஜோகன் ரிஷியை வாயில் துணிவைத்து கொலை செய்ததது தெரியவந்தது.  இரவில் கடலில் வீசி விட்டு, அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்துவிட்டான் என நடிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். போலீசார் கடற்கரையில் காவலில் இருந்ததால், உடலை பீரோவில் மறைத்து வைத்ததாக, பாத்திமா  வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து, பாத்திமாவை கைது செய்த போலீசார், அவரது கணவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்