குடியாத்தம் அருகே எருது விடும் விழா - சீறிப் பாய்ந்து ஓடிய காளைகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயில் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெறுவது. இதையொட்டி மண் சாலை , இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயில் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெறுவது. இதையொட்டி  மண் சாலை , இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. இருபுறமும் திரண்டு நின்ற ஏராளமான இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து எருதுகள் ஓடுவதை கண்டு ரசித்தனர். அதிவேகமாக ஓடும் எருதுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.   எருது விடும் விழாவை யொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்