தாறுமாறாக காரை ஓட்டிய தொழிலதிபர்.. மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

புதுச்சேரியில் தாறுமாறாக கார் ஓட்டியவரை பொது மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
x
புதுச்சேரியில் தாறுமாறாக கார் ஓட்டியவரை பொது மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். வைத்திகுப்பம் பகுதியை சேர்ந்த யூசுப் என்ற தொழிலதிபர் புதுச்சேரி நோக்கி காரில் சென்று  கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மற்றும் இரு சக்கர வாகனம் மீது இடித்ததாக கூறப்படுகிறது. தாறுமாறாக காரை ஓட்டி சென்ற யூசுப்பை  தட்டாஞ்சாவடி அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்