பேருந்து நிலையத்தில் தவித்த 3 வயது குழந்தை - 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் தவித்த மூன்று வயது குந்தையை, போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு - வசந்தா தம்பதியின் மூன்று வயது குழந்தை சபரியை, அரூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டதாக தெரிகிறது. நீண்ட நேரம் கண்ணீர் மல்க அழுத குழந்தையை, பயணிகள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இரண்டு மணி நேரத்தில் பெற்றோரை கண்டறிந்த போலீசார், குழந்தையை ஒப்படைத்தனர்.
Next Story