11ஆம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பம் - விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மாமல்லபுரம் அருகே உள்ள, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
திருவண்ணாமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின், 16 வயது மகள் மாமல்லபுரம் அருகே உள்ள பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் திருண்ணாமலைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மாணவி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்த‌து. மருத்துவர்கள் கூறிய தகவலால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாணவி படித்த உண்டு உறைவிட பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்