தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. வார்டு மறுவரையறை பணிகள், இட ஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, வருகிற 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2ம் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story