கொட நாடு கொலை , கொள்ளை வழக்கு - 5 பேரிடம் தீவிர விசாரணை !

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் கட்சியினர் பேரம் பேசியதாக கூறிய 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் கட்சியினர் பேரம் பேசியதாக கூறிய 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் இதில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 5 பேரை கேரளாவில் இருந்து அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் விசாரணை நடந்த நிலையில் அதனை தொடர்புபடுத்தி விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்