மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் ஒத்திவைப்பு - தமிழக அரசு

திங்கள்கிழமை தோறும் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்