2022 முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரை - தமிழில்

2022 முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரை - தமிழில்
2022 முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரை - தமிழில்
x
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், மாநிலத்தின் நிதி வருவாயை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்றார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார். முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 99ஆயிரத்து மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 30ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை வருவதாக அவர் கூறினார். இதை தவிர பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், மேலும்  கல்வி நிலையங்களில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்