கொரோனா - அன்றும், இன்றும் 2021 Vs 2022...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் நிலைமை எப்படி இருந்தது என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...
x
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 838 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது குறிப்பிடத்தது. 

நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 798 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வருடம் இதுவே 60 ஆயிரத்து 502 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தை விட கடந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நேற்று சென்னையில் மட்டும் ஒரே நாளில்  ஆயிரத்து 489 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் சென்னை பாதிப்பு, 229 ஆக இருந்தது. அன்றும் இன்றும்... தமிழக மாவட்டங்களில் சென்னையே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்