குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல்

நேற்றிரவு பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
x
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட சிவாஜி நகர், அஜீஸ் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அடிப்படை தேவைக்கு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் அங்கிருப்போர் வீடுகளில் முடங்கினர். தாழ்வான பகுதியில் தேங்கிய நீரால் சிலர் முதல் தளத்திற்கு மாறி வருகிறனர். மாநகராட்சி மழைநீர் செல்லும் கால்வாய்களை செப்பனிடப்பட்டு இருந்தால் மழைநீர் தேங்காமல் வடிகால் வழியாக பக்கிங்காம் கால்வாய் சென்றடைந்திருக்கும் என கூறும் பொதுமக்கள், அதிகாரிகளின் மெத்தன போக்கினால் தண்ணீர் தேங்குவதாக குற்றம்சாட்டினர். உடனடியாக தேங்கிய மழை நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்