கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பயனாளிகள் 25 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான கோயில்களில் பணிபுரியும், மொட்டை அடிக்கும் பணியாளர்கள் ஆயிரத்து 749 பேருக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.   



Next Story

மேலும் செய்திகள்