ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் வரும் 22 இல்  இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. . அதேபோல்,  தற்செயல் தேர்தல் நடைபெறும் 28   மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்